வயிறு சரியில்லாத போது என்னென்ன உணவு பொருட்களை நாம் சாப்பிட வேண்டும் ?

- Advertisement -

பொதுவாக வயிற்று பிரச்சனை என்பது இந்த நவீன காலகட்டத்தில் அனைத்தும் மக்களுக்கும் வரும் பொதுவான மற்றும் சாதாரண பிரச்சனையாக மாறிவிட்டது. அதற்கு காரணம் நான் சாப்பிடும் சாப்பாடுகளும். நமது நவீன உணவு பழக்க வழக்கங்களும் தான் காரணம். நாகரீகம் என்ற பெயரில் முறையாக சமைக்கப்படாத உணவுகளையும் சாப்பிடுவதன் மூலமாகவும். மேலும் உணவின் ருசியையும், சுவையையும், நிறத்தையும், மற்றும் மணத்தையும் கூட்டுவதற்காக அதில் சேர்க்கப்படும் பொருட்கள் நமது வயிற்றுக்கு தீங்கு விளைவிப்பதாக அமைகிறது. இதன் காரணமாக நமக்கு ஃபுட் பாய்சன் அதாவது வயிற்றுக் காய்ச்சல் எனப்படுவது வயிறு சார்ந்த பிரச்சனைகள். நம் உடம்பில் இது போன்று வயிற்று காய்ச்சல் ஏற்படும்பொழுது என்னென்ன உணவு பொருட்கள் சாப்பிட வேண்டும் அதற்கான காரணங்களையும் இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : ஃபுட் பாய்சனை நீக்கும் எளிய வீட்டு மருந்து !

- Advertisement -

வாழைப்பழம்

வயிறு சரியில்லாத போது நாம் திடமான உணவு பொருட்களை சாப்பிடாமல். எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவு பொருட்களை சாப்பிட வேண்டியது அவசியம். வாழைப்பழம் இதற்கு உகந்த உணவு ஏனென்றால் வாழைப்பழம் எளிதில் செரிமானம் ஆகிவிடும் மற்றும் நம்ம வயிறு சரியில்லாத போது ஏற்படும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நம் உடலில் உள்ள நீர் சத்துக்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களை இழந்துவிடுவோம். வாழைப்பழத்தை நாம் சாப்பிடும் பொழுது நாம் இழந்த பொட்டாசியம் சத்துக்கள் திரும்ப பெறுவோம் மேலும் வாழைப்பழத்தில் உள்ள பெக்டின் என்ற பொருள் உடலில் உள்ள அதிகப்படியான நீரை ஊறிந்து எடுத்து நமது மலத்தை உறுதியாக்கி வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும்.

அரிசி சாதாம்

மேலும் வயிறு சரி இல்லாத போது நம்ம உடம்பில் ஏற்படும் வாந்தி மற்றும் வயிற்று போக்கின் காரணமாக முதலில் உள்ள ஆற்றலை இழக்க நேரிடும் ஆகையால் நாம் வெள்ளை அரிசியில் உப்பு கலந்து அரிசி சாதம் தயார் செய்து சாப்பிடுவதனால். அதிலுள்ள கார்போஹைட்ரேட் நம் உடம்பில் இழந்த ஆற்றலை நமக்கு மீட்டுத் தந்து. நம் உடல் ஆரோக்கியமாக வளம் பெற உதவுகிறது. மேலும் நாம் அரிசி சாதம் சாப்பிடுவதால் இந்த உணவு எளிதில் செரிமானம் ஆகும் தன்மையும் கொண்டது.

இளநீர்

வயிற்றுக் காய்ச்சலால் நம் உடம்பில் உண்டாகும் வயிற்றுப்போக்கால் மிகவும் அவதிப்படுவோம். நமக்கே தெரியாமல் நமது உடம்பில் நீர் இழப்பு அதிகமாக ஏற்படும். இது போன்ற சமயங்களில் நம் இளநீர் மற்றும் தேங்காய் தண்ணீர் பருகுவதன் மூலம் நம் உடலுக்கு தேவையான பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற முக்கிய சத்துக்களை உடலில் சேர்க்கின்றது. மேலும் முக்கியமாக தேங்காயில் உள்ள எலக்ட்ரோலைட் என்ற பொருள் நம் உடலுக்கு மிகப்பெரிய சக்தியை தரும்.

-விளம்பரம்-

தயிர்

தயிரும் நம் வயிற்று பிரச்சினைகளை சரி செய்ய உதவும் ஒரு முக்கியமான உணவு பொருளாகும். தயிரை சாதத்துடன் சேர்த்து இரவு உணவாக எடுத்துக் கொள்வது மிகச் சிறந்தது என காலம் காலமாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். தயிர் நம் இரைப்பையில் நமக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் வளர்ச்சிக்கு வித்திடும். மேலும் தயாரில் உள்ள சத்துப் பொருள்கள் நம் வயிற்றில் ஏற்படும் வயிற்றுப்போக்கு, குடல் வீக்கம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்து நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here