தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இருப்பினும் கொஞ்சம் சிரமப்பட்டு வாரத்தில் ஒரு முறையாவது சிறுதானிய வகைகளை உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். சிறு தானிய வகைகளில் முக்கியமானது கம்பு. பனிக்காலத்தில் நமது உடலை சூடாக வைத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகளில் கம்பும் ஒன்று. கம்பு வைத்து செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் நமக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் தான்.
சத்துக்கள் நிறைந்த பொருட்களில் ருசி கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். ருசி நிறைந்த பொருட்களில், சத்துக்கள் மிக மிகக் குறைவு. ஆனால் இது நம்மில் பல பேருக்கு தெரியாது. நாவிற்கு ருசியை தரும் பொருட்களாக தேடித்தேடி சாப்பிடுவோம். இனி உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களில், ருசி கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. நம்முடைய உணவோடு சேர்த்துக் கொள்ளலாம். தானியங்களிலேயே அதிக அளவில் புரதம், கம்பில் தான் 11.8 சதவிகிதம் உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ரிபோஃப்ளோவின், நாயசின், வைட்டமின்கள், தாதுப்புக்கள், மாவுச்சத்து, வைட்டமின் B12, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இரத்த சோகைப் பிரச்சனைக்குத் சிறந்த தீர்வை தருகிறது.
கம்பு வைத்து கஞ்சி, களி, புட்டு என்று பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம். வழக்கமாக நாம் காசி அல்வா, இருட்டு கடை அல்வா என்று செய்து சாப்பிட்டு இருப்போம். மேலும் ஏராளமான மருத்துவ பயன்களை கொண்டுள்ள கம்பில் இன்று நாம் பாரம்பரிய முறையில் கம்பு வைத்து அல்வாவை வீட்டில் சுவையாகவும் எளிமையாகவும் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கம்பு அல்வா | Kambu Halwa Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 2 கப் கம்பு
- 3/4 கப் நாட்டு சர்க்கரை
- 1/4 கப் நெய்
- 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 1/2 சிட்டிகை உப்பு
- முந்திரி சிறிதளவு
செய்முறை
- முதலில் கம்பை நன்கு அலசி விட்டு இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
- கம்பு நன்கு ஊறியதும் ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின் ஒரு வடிகட்டியால் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் அதே கடாயில் நெய் சேர்த்து கம்பு பாலை ஊற்றி கைவிடாமல் கிளறவும். அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பால் நன்றாக கொதித்து பச்சை வாசனை நீங்கி நன்றாக சுருண்டு வரும் வரை கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
- பின்பு சர்க்கரை, கேசரி பவுடர் சேர்த்து நன்றாக கிளறி, கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து நன்றாக அல்வா சுருண்டு வரும் வரை கிளறவும்.
- பால் நன்றாக சுருண்டு அல்வா பதத்திற்கு வந்ததும் ஏலக்காய் தூள், முந்திரி சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
- அவ்வளவுதான் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான கம்பு அல்வா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : பப்பாளி பழம் இருந்தால் போதும் தித்திக்கும் சுவையில் அல்வா இப்படி செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுங்கள்!