இன்று நாம் காலை அல்லது இரவு உணவாக நான் செய்யும் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகை உணவுகளுக்கு உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற எலுமிச்சை பழ சட்னி பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக நாம் வீடுகளில் இட்லி தோசை செய்யும் பொழுது அதனுடன் வைத்து சாப்பிட அதிகபட்சமாக நாம் செய்யும் சட்னியை தேங்காய் சட்னி தக்காளி சட்னி தான். இந்த இரு சட்னிகளை மட்டுமே ஒரு சுழற்சி முறையில் மாற்றி மாற்றி வைத்து சாப்பிடுவோம்.
இதையும் படியுங்கள் : சுவையான கிராமத்து பச்சை பயறு சட்னி செய்வது எப்படி ?
ஆனால் உங்களுக்கு புதியதாக ஏதேனும் சட்னி செய்ய விருப்பப்பட்டால். அப்போது நீங்கள் கண்டிப்பாக இந்த எலுமிச்சை பழ சட்னியை செய்து பாருங்கள் இது போன்ற நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த எலுமிச்சை பழ சட்னி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
எலுமிச்சை பழம் சட்னி | Lemon Chutney Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
சட்னி செய்ய
- 2 tbsp எண்ணெய்
- ¼ tsp வெந்தயம்
- 2 tsp உளுந்த பருப்பு
- 1 tsp கடலை பருப்பு
- 12 வர மிளகாய்
- 3 எலுமிச்சை பழம்
தாளிக்க
- 1 tbsp எண்ணெய்
- ½ tsp கடுகு
- ½ tsp உளுந்த பருப்பு
- ½ tsp கடலை பருப்பு
- 1 கொத்து கருவேப்பிலை
- 2 வர மிளகாய்
- 5 பல் நசுக்கிய பூண்டு
- 1 கொத்து கருவேப்பிலை
- ¼ tsp பெருங்காய தூள்
செய்முறை
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் கால் டீஸ்பூன் வெந்தயம், இரண்டு டீஸ்பூன் உளுந்த பருப்பு, ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து நான்கு வறுத்து கொள்ளுங்கள்.
- பின் இதனுடன் 12 வர மிளகாய் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். வர மிளகாய் நன்கு வறுபட்டதும் கடாயை கீழ் இறக்கி வறுத்த பொருட்களை நன்கு குளிர வைத்துக் கொள்ளுங்கள். பின் குளிர வைத்த பொருள்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ளுங்கள்.
- பின் இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மூன்று எலுமிச்சை பழம் சாறு விதைகள் இல்லாமல் சேர்த்து பின் பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக இதில் தண்ணீர் ஊற்றி அரைக்க கூடாது.
- பின் அரைத்த சட்னியை ஒரு பவுளில் தனியாக எடுத்து கொண்டு. பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுக உளுந்தம் பருப்பு சேர்க்கவும்.
- பின் கடுகு பொரிந்தவுடனா கடலை பருப்பு, வர மிளகாய், நசுக்கிய பூண்டு, கருவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் போன்ற பொருட்களை எல்லாம் சேர்த்து தாளித்து சட்னியுடன் கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான எலுமிச்சை பழ சட்னி தயாராகிவிட்டது.