எப்பொழுதும் இட்லி, தோசைக்கு சாம்பார், சட்னி, போன்று செய்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? உங்களுக்கு காரசாரமாக சாப்பிடனுனு தோணுதா? அப்போ இந்த கார சாப்பிடனுனு செய்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். இது போன்று தண்ணீர் சட்னி
இதையும் படியுங்கள்:நெல்லை ஸ்பெஷல் கார சட்னி இப்படி ஓரு தரம் செஞ்சி பாருங்க!
ஹோட்டல்களில் தான் சிலர் ருசித்திருப்பார்கள். வீட்டில் அதே சுவையில் செய்து ருசித்திருக்க மாட்டீர்கள். இப்பொழுது அந்த கவலை வேண்டாம். வீட்டிலேயே சுலபமாக ஹோட்டல் தண்ணீர் சட்னி எப்படி செய்யலாம் என்றுதான் இப்பொழுது பார்க்க போகிறோம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மதுரை தண்ணீர் சட்னி விரும்பி உண்பர். அதனால் இன்று இந்த தண்ணீர் சட்னி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
மதுரை தண்ணீர் சட்னி| Madurai Water Chutny Receipe in Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 கடாய்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 2 பச்சை மிளகாய்
- 5 பூண்டு
- 1 வெங்காயம்
- 2 tbsp பொரிகடலை
- ¼ tsp கடுகு
- ½ tsp] உளுத்தம் பருப்பு
- 1 கொத்து கருவேப்பிலை
- 2 மிளகாய் வற்றல்
- தேவையான அளவு தண்ணீர்
- உப்பு சிறிதளவு
செய்முறை
- மதுரை தண்ணீர் சட்னி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கி பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் கலவை ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் கலவையை போட்டு அதில் பொரிகடலை, உப்பு சேர்த்து அரைத்துக் தனியே எடுத்து கொள்ள வேண்டும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கருவேப்பிலை தாளித்து கலவையில் போட வேண்டும்.
- ஷட்டியில் சிறிது நீரை ஊற்ற வேண்டும். இப்பொழுது சுவையான மதுரை தண்ணீர் சட்னி தயார்.