அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால் குழம்பு, இறால் கிரேவி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு தேவையான ஆற்றலையும், சக்தியையும் கொடுப்பதற்கு இறால் மிகவும் உதவியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு உணவு தான் இறால் மசாலா வடை இதனை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதுவரை நீங்கள் இறாலைக் கொண்டு வறுவல், குழம்பு என்று தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் இறாலைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையுடைய வடை செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், இறால் வடையை மாலை வேளையில் செய்து சாப்பிடலாம். அதோடு விருந்தினர்கள் வீட்டிற்கு வந்திருக்கும் போது, இறால் வடை செய்தால் அவர்களின் பாராட்டைப் பெறலாம். க்ரிஸ்பியான, மற்றும் சுவையான இறால் வடையை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் இருக்கும். மற்ற கடல் உணவுப் பொருட்களைப் போல் இறாலில் அதிகமாக கால்சியம், அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இறால்களில் அதிகப்படியான கொழுப்பு காணப்படுகிறது. இந்த கொழுப்பானது நல்ல கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பு வகையைச் சேர்ந்ததால், இதனை உணவில் சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இத்தகைய சத்து மிக்க இறாலில் வடை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இறால் மசாலா வடை | Prawn Masala Vada Recipe In Tamil
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
- 1 வாணலி
தேவையான பொருட்கள்
- 1/4 கி இறால்
- 1 கப் கடலை பருப்பு
- 4 பெரிய வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 துண்டு இஞ்சி
- 10 பல் பூண்டு
- 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் இறாலை தோல் உரித்து நன்கு தண்ணீரில் அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் பருப்பை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதன்பிறகு பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை இவற்றை பொடியாக நறுக்கி பருப்புடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு, பூண்டு, இஞ்சி வரமிளகாய், சுத்தம் செய்து வைத்துள்ள இறால், பெருங்காயத்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- பின் இவற்றை பருப்புடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இந்த கலவையை சிறிது எடுத்து வடை போல தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான இறால் வடை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கமகமனு ருசியான செட்டிநாடு இறால் தொக்கு இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! நாவில் எச்சி ஊறும்!