மழைக்காலங்களில் அல்லது டீக்கடைகளில் நம்மளுக்கு வடை என்றாலே மிகவும் பிடிக்கும் அந்த வலையுடன் டீ காபி வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் வடை ஹோட்டல்களில் வைத்து சாப்பிட்டால் அதனுடைய சட்னி சாம்பார் வைத்து சாப்பிட்டால் அதன் சுவை வேற லெவல் ஆக இருக்கும் ஆனால் புளி வடை சாப்பிட்டு இருக்கீங்களா? புளி வடை மிகவும் அருமையான ஒரு வடைகளில் ஒன்றாகும் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள்
இதையும் படியுங்கள் : டீ கடை கார வடை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான புளி வடை செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த புளி வடை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
புளி வடை | Puli Vadai Receipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1 cup இட்லி அரிசி
- ½ cup துவரம் பருப்பு
- 6 மிளகாய் வற்றல்
- 1 tbsp சீரக தூள்
- 1 tbsp கடலைப்பருப்பு
- புளி எலுமிச்சை பழ அளவு
- 1 cup துருவியது தேங்காய்
செய்முறை
- புளி வடை செய்ய முதலில் இட்லி அரிசி, துவரம் பருப்பு நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- புளியை சிறிது தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவைத்து புளியை கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மிளகாய் வற்றலை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- கலவை ஊறியவுடன் கிரைண்டரில் அரைக்கும் பொழுது பாதி அரைத்தவுடன் அதில் தேங்காய் துருவல்,மிளகாய் வற்றல், கரைத்த புளி ஆகியவற்றை தண்ணீர் ஊற்றாமல் அரைக்க வேண்டும்.
- கலவை அரைத்தவுடன் ஒரு பாத்திரத்தில் எடுத்து சீரகத்தூள் சேர்த்து கலவையை காட்டன் துணியில் போட வேண்டும் அப்பொழுது நீரை உறிஞ்சும்.
- நீர் உறிஞ்சதும் கலவையை சப்பாத்தி மாவு பதம் போல் இருக்கும். அதை சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வட்ட வடிவில் தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி வட்ட வடிவில் தட்டியவற்றை அதில் போட்டு பொறித்தெடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான புளிப்பு வடை தயார்.