- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- sweets
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் குழந்தைகள் வீட்டில் இருக்கிறார்களா? எப்போதும் உங்களிடம் ஸ்நாக்ஸ் கேட்டு அடம் பிடித்து கொண்டிருக்கிறார்களா? முடிந்தவரை கடைகளில் வாங்கி தருவதை தவிர்த்து சுத்தமான சுகாதாரமான முறையில் வீட்டில் ஏதேனும் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். மாலையில் குழந்தைகளுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால், ரோஸ் பிர்னி செய்து கொடுங்கள்.
பிர்னி என்பது பாஸ்மதி அரிசியுடன் தயாரிக்கப்பட்ட ஒரு கெட்டியான மற்றும் கிரீம் புட்டு ஆகும். இந்த ரோஸ் பிர்னி செய்முறையானது வழக்கமான பிர்னிக்கு மிகவும் பொதுவான மாறுபாடுகளில் ஒன்றாகும். இந்த ரோஸ் பிர்னி என்பது அரிசி மற்றும் ரோஜா இதழால் செய்யப்பட்ட ஒரு சுவையான இந்திய இனிப்பு ஆகும். அரிசி நன்கு அரைக்கப்பட்டு, பால், ஏலக்காய் தூள் மற்றும் பல பொருட்களுடன் சேர்த்து செய்யப்படுகின்றது. இது மிகவும் சுவையாகவும் சத்தும் நிறைந்ததாகவும் இருக்கும்.
வட இந்தியா முழுவதும், குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், திருமணங்கள், பண்டிகைகள் அல்லது எந்த சிறப்பு கொண்டாட்டங்களிலும் இந்த இனிப்பு மிகவும் பிரபலமானது. ரோஜாவைக் கொண்டு செய்யப்படும் இந்தப் பிர்னியை நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் அன்புக்குரியவர்களுக்காக இந்த பிர்னியை வீட்டிலேயே தயார் செய்து, அவர்கள் எதிர்பார்க்காத போது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கலாம். இப்போது சுவையான ரோஸ் பிர்னி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : மேங்கோ பிர்னி இந்த மாதிரி செஞ்சு கொடுத்த அசத்துங்க
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை ரோஜா மற்றும் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
பின் ஊற வைத்த பாசுமதி அரிசியை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்திற்கு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நாம் வடிகட்டி வைத்துள்ள ரோஜா தண்ணீரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் பால் சேர்த்து கலந்து விடவும்.
பால் கொதித்ததும் அரைத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து 15 நிமிடங்கள் வேகவிடவும். அரிசி முக்கால் பாகம் வெந்ததும் சர்க்கரை, ஏலக்காய் தூள், நெய், ரோஸ் எசன்ஸ் சேர்த்து சிறிது நேரம் கைவிடாமல் கலந்து விடவும்.
பின் அரிசி நன்கு வெந்து வந்ததும் நறுக்கிய பாதாம், பிஸ்தா சேர்த்து கலந்து இறக்கவும். இதனை பிரிட்ஜில் வைத்து பின் பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான ரோஸ் பிர்னி தயார்.






